மீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே நேற்று முன்தினம் இரவு ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வந்த டூரிஸ்ட் வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் சட்டை பாக்கெட்டில் ஆதார் கார்டு இருந்தது. 

அதனை போலீசார் எடுத்து விசாரணை நடத்தியபோது, இறந்தவர் பெயர் சுரேந்திர புத்தர் (வயது 30), ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் அவர் எங்கு வேலை செய்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை. 

இந்த விபத்து தொடர்பாக வேன் டிரைவர் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த அன்பரசன் (31) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments