கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் வகுப்புகல்ள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், இறுதி ஆண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதர மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழககம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். தேர்வு எழுதும் போது மாணவர்கள் தங்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம் என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 16ஆம் தேதியும், பிப்ரவரி 13ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதியும் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.