தனிமனித அடையாள ஆவணமான ஆதார், தற்போது அனைத்து சேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில், டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிப்பு மற்றும் இதர சேவைகளுக்கும் ஆதார் தற்போது கட்டாயமாக்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிதாக உருவாக்கியுள்ள வரைவறிக்கையில் இதுதொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பவர்கள் ஆதார் சரிபார்ப்புக்கு உட்பட வேண்டும்.
அதேபோல, ஆர்.சி., எல்.எல்.ஆர்.,சர்வதேச ஓட்டுநர் உரிமம், வாகன உரிமையாளரின் பெயர் மாற்றம் போன்ற 15 ஆன்லைன் சேவைகளுக்கும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் இச்சேவைகளைப் பெறமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. சமூக நலன், புதிய கண்டுபிடிப்பு மற்றும் அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைவறைக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசன்ஸ் இனி ஈசியா வாங்கலாம்!
ஆதார் இல்லாமலும் இச்சேவைகளைப் பெறமுடியும். ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆன்லைன் வாயிலான சேவைகளுக்கு மட்டுமே இந்த ஆதார் சரிபார்ப்பு முதலில் கட்டாயமாக்கப்படுகிறது. ஆதார் சரிபார்ப்பு மூலம் போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்படுவது மற்றும் வாகனங்கள் தொடர்பான மோசடிகளைத் தடுக்க முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு டிரைவிங் டெஸ்ட் இல்லாமல் வாங்கும் வகையில் புதிய வரைவறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.