புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 65). இவரது மகன் இறந்ததால் மீனாம்பாளின் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்தார். லதாவுக்கும், மீனாம்பாளுக்கும் மனக்கசப்பு இருந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் மீனாம்பாள் அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மீனாம்பாளின் உடலை ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
வீட்டிற்கு கொண்டு வந்தபோது, உடலை வீட்டிற்குள் லதா அனுமதிக்க மறுத்தார். இதனால் பக்கத்து வீட்டினர் சம்மதத்தின் பேரில் அங்கு வைத்து இறுதி சடங்கு நடந்தது.
பின்னர் மீனாம்பாளின் உடலை எடுத்து சென்று இளஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.