கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் குடிநீர் விநியோகம் பராமரிப்பு செலவு அதிகமான காரணத்தினால் ஒரு குடம் ரூ.7 என நிர்ணயம் செய்யப்பட்டு நேற்று 15.02.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. GPM மக்கள் மேடை கடந்த 08.04.2019 அன்று கோபாலப்பட்டிணம் மக்களுக்கு குறைந்த விலையில் ரூ.5-க்கு வீடு வீடாக சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வந்தனர். இந்நிலையில் தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் செய்வது தொடர்பான செலவுகள் அதிகரித்துவிட்டதால் GPM மக்கள் மேடையின் விதிப்படி (ByLaw) உறுப்பினர்களிடத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டு பிறகு வாக்குபதிவு நடைபெற்றது.
கடந்த 31.01.2021 அன்று GPM மக்கள் மேடை வாட்ஸ்ஆப் குழுமத்தில் நடைபெற்ற வாக்குபதிவின் அடிப்படையில் ஒரு டோக்கன் மற்றும் ஒரு குடத்தின் விலை ரூ.5-ல் இருந்து ரூ.7-ஆக நிர்ணயம் செய்ய வாக்குபதிவின் முடிவு அமைந்தது.
அதனடிப்படையில் தவிர்க்க முடியாத இந்த விலை உயர்வானது நேற்று 15.02.2021 முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என GPM மக்கள் மேடையின் 6-வது ஆலோசனை குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்: ஆலோசனை குழு 6, GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, பெரிய பள்ளிவாசல் வளாகம், கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.