புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமரடக்கி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் கலையரசிராஜா, துணைத்தலைவர் சசிகலா கலைமணி தலைமையில், மகளிர் திட்டம் வட்டரா இயக்கமேளலர் ஜெயந்தி, வட்டரா ஒருங்கிணைப்பாளர் சத்யா, ஊராட்சி செயலாளர் முன்னிலையில் பொதுமக்களுக்கு ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியானது அமரடக்கியில் தொடங்கி முக்கிய சாலையான அம்மன் கோவில் வழியாக சென்று காசியார் மடம் மெய்க்கேல் ஆண்டவர் கோவில் அருகில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் அனைத்து மகளிர் குழுக்களின் தலைவவர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிப்பதை பற்றிய விளக்கி கூறினர்.
தகவல்: கலை பிரபு, அமரடக்கி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.