அமரடக்கி: நாளை (ஜன.31) மின்தடை ரத்து - மின்வாரியம் அறிவிப்பு



அறந்தாங்கி அருகே உள்ள அமரடக்கி துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 31) நடைபெறவிருந்த பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறந்தாங்கி கிராமிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின், அறந்தாங்கி கிராமிய உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33/11 KV அமரடக்கி துணை மின் நிலையத்தில் நாளை (31.01.2026) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இருந்தது. இதன் காரணமாக அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நிர்வாகக் காரணங்களினால் இந்த பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே, நாளை (31.01.2026) அமரடக்கி துணை மின் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments