அறந்தாங்கி அருகே உள்ள அமரடக்கி துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 31) நடைபெறவிருந்த பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி கிராமிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின், அறந்தாங்கி கிராமிய உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33/11 KV அமரடக்கி துணை மின் நிலையத்தில் நாளை (31.01.2026) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இருந்தது. இதன் காரணமாக அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிர்வாகக் காரணங்களினால் இந்த பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே, நாளை (31.01.2026) அமரடக்கி துணை மின் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.