இலுப்பூர் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4½ லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி விராலிமலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் இலுப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன.
ஆனால், அந்த பொருட்களை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.