இலுப்பூரில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4½ லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!



இலுப்பூர் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4½ லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி விராலிமலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் இலுப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன.

ஆனால், அந்த பொருட்களை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments