புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 44 பேருக்கு கொரோனா





           
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 96 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

 தொற்று அதிகரித்து வருகிற நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் போதுமான அளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments