தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கவும், ஆக்சிஜன் போன்றவை வாங்கவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வேண்டுகோளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ரூ.1,03,900 மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் ஒப்படைத்தனர்.
தகவல்: மொளவி,ஹாஃபிழ் S.A.ஜாஃபர் அலி உலவி, (செயலாளர் புதுகை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை),தலைமை இமாம் பெரிய பள்ளிவாசல், ஜெகதாபட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.