புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்: கலெக்டர் கவிதா ராமு தகவல்!



புதுக்கோட்டைமாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று பெருமளவு குறைந்துள்ளது. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5,867 மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 1,025 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இப்பணியை மேலும் விரைவுப்படுத்திட கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீ்ட்டிற்கே சென்று தடுப்பூசி போடவும், தனியார் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் மறுவாழ்வு இல்லத்திற்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி தவறாமல் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, பொதுசுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments