புதுக்கோட்டைமாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தொற்று பெருமளவு குறைந்துள்ளது. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5,867 மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 1,025 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இப்பணியை மேலும் விரைவுப்படுத்திட கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீ்ட்டிற்கே சென்று தடுப்பூசி போடவும், தனியார் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் மறுவாழ்வு இல்லத்திற்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி தவறாமல் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, பொதுசுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.