தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி சாதாரண கட்டண அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இலவச பயண சலுகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த சலுகை மூலம் அரசு பஸ்களில் எத்தனை பேர் இலவசமாக பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கிடுவதற்காக சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் பஸ் டிக்கெட் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அனைத்து பெண்களும் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகள் இன்று (நேற்று) முதல் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
இவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் 23-ந் தேதி (நாளை) முதல் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில் பஸ்கள் இயக்கப்பட்டவுடன் இந்த நடைமுறை தொடரும்’ என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.