தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் போதிய போக்குவரத்து வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் கிடைக்காமல் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த பல வருடங்களாக தொண்டியை மையமாக வைத்து போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்து, இடம் தேர்வு செய்வதும் , அதன்பின் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என தொண்டி திமுக சார்பில் எம்எல்ஏ கரு.மாணிக்கம் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக நகர செயலாளர் இஸ்மத் நானா கூறுகையில், தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தொண்டியை மையமாக வைத்து பணிமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.