கோபாலப்பட்டிணத்தில் அரை மணி நேரம் பெய்த பலத்த மழை





கோபாலப்பட்டிணத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் வளிமண்டல அதிகமாக உள்ளதால் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.

தமிழகத்தில்   சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 
தென்மேற்கு பருவமழை காலம் என்றாலும்  கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஜூலை 3 சனிக்கிழமை இன்று வெயிலும் கடுமையாக இருந்தது. தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து மாலை 5 மணி அளவில்  
மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது பிறகு மழை நின்றது .
மழையின் காரணமாக சாலையோரங்களிலும், வீடுகளிலும் மழைநீர்  தேங்கி நின்றது. 

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது






















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments