கோபாலப்பட்டிணத்தில் GPM பொது நல சேவை சங்கம் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்





கோபாலப்பட்டிணத்தில் GPM பொது நல சேவை சங்கம் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்பட்டது.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில்
GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளி அருகில் உள்ள பொதுநல சேவை சங்கம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பொதுநல சேவை சங்கம் சேர்மன் மற்றும் ஜமாஅத் தலைவர் ASM செய்யது முகமது முன்னிலையில் ,ஊர் ஜமாஅத் தலைவர் OSM முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள் ,.மேலும்  முன்னாள் கவுன்சிலர் முகமது இக்பால் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்

இந்த விழாவில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மருத்துவர் முஹம்மது சித்திவ் கொரனோ விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்

இறுதியாக பொதுநல சேவை சங்கம் பொருளார் அப்துல் சலாம் நன்றியுரை ஆற்றினார்கள்

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தில்  உள்ள ஊர் ஜமாத்தார்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ,பொதுமக்கள் மற்றும் பொது நல சேவை சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments