மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி டோஸ்கள் மொத்தம் 63 ஆயிரம் அளவில் வந்தன. அவை புதுக்கோட்டையில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன.
இதில் இருந்து மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ளலாம்.
அடையாள அட்டை
இதேபோல முதல் தவணை தடுப்பூசி டோஸ் செலுத்தி 2-வது தவணை டோஸ்க்காக காத்திருப்பவர்களும் செலுத்திக்கொள்ளலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய புத்தகம், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
75 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி
கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் கவிதா ராமு உள்பட அதிகாரிகள் பலர் விழிப்புணர்வு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதில் கலெக்டர் கவிதா ராமு வெளியிட்ட வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் 75 கிராம ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். இதேபோல மற்ற கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக பங்கெடுத்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.