புதுக்கோட்டை மாவட்டத்தில்5 மாணவர்கள்- ஆசிரியைக்கு கொரோனா தொற்று




மிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆங்காங்கே மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏற்கனவே மாணவ-மாணவிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் குளமங்கலம், பனையப்பட்டி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பி.அழகாபுரி அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மாணவ-மாணவிகள் 10 பேர், ஆசிரியை ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களின் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments