சென்னை: 3- வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி...!




    

விளையாடிக் கொண்டிருக்க குழந்தையின் சகோதரி சிறுமியும் விளையாட்டுத்தனமாக வீட்டிற்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை மண்ணடி, இப்ராகிம் சாஹிப் 2-வது தெருவைச் சேர்ந்த செல்வகனி - யாசின் தம்பதி.  அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்றாவது குழந்தையான ஆபியா நேற்றிரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது.  தாய் யாசினும் உடனிருந்துள்ளார். சிறிது நேரத்தில் சமையல் வேலையை கவனிப்பதற்காக, மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு யாசின் உள்ளே சென்றுள்ளார்.

விளையாடிக் கொண்டிருக்க குழந்தையின் சகோதரி சிறுமியும் விளையாட்டுத்தனமாக வீட்டிற்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், குழந்தை ஆபியா இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியதாகவும், எதிர்பாராதவிதமாக கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை விழுந்ததும், சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி சென்று பார்த்த நிலையில், அதற்கு அப்புறம் தான் சமையலறையில் இருந்த தாய் யாசினுக்கு குழந்தை கீழே விழுந்துவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தையின் உயிர் இழந்து விட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments