ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காரசூராம்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக பரம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதி திட்ட தொடக்க விழா காரசூராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆட்டோ வசதியை பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி தொடங்கி வைத்து பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் பள்ளி வசதி இல்லாத அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த காரசூராம்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள 9 குழந்தைகள் பாதுகாப்பாக பரம்பூர் பள்ளி சென்றுவர போக்குவரத்து வசதி நிதி் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த நிதி ஒரு மாணவருக்கு மாதம் ரூ.600 வீதம் 5 மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முறையான உரிமம் பெற்ற ஆட்டோ, வேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இதில் வட்டார வளமைய பயிற்றுனர்கள், பரம்பூர் பள்ளி ஆசிரியர்கள், பரம்பூர், காரசூராம்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.