கோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை:முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம்! வேகமாக நிரம்பி வரும் நெடுங்குளம்!!



தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் போதிய மழை இல்லாமல் குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது.கனமழை பெய்துவரும் நிலையில் குளங்கள் நிரம்பி வருகிறது. 
 
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. நெடுங்குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

குளிக்க வரும் மக்கள், குளத்துக்கரையில் நின்று புகைப்படம் எடுத்தும், குளத்தில் நீராடியும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

காட்டுக்குளம் முழு கொள்ளவை எட்டியுள்ளது மட்டுமல்லாது முன்னர் வற்றி கிடந்த குளம் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதனால் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

தொடர் மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்யப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் குளத்தில் நிரம்பி வருகிறது.

காட்டுகுளம்:






நெடுங்குளம்:




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments