கடந்த சில மாதமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள குளங்கள் மழை நீரால் நிரப்பப்பட்டு, நிரம்பி வழிந்து காட்சியளிக்கிறது.
இத்தகைய சூழலில் கோபாலப்பட்டிணத்தில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அக்குளங்களுக்கு குளிக்க செல்லும் நாமும் சரி, நம்மோடு அழைத்து செல்லப்படும் நமது வீட்டு சிறு பிள்ளைகளாயினும் சரியே மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் குளிக்குமாறு அன்போடு அறிவுருத்திக்கொள்ளப்படுகிறது.
பிள்ளைகளை வெகு ஆழத்திற்க்கு அழைத்து செல்வதோ, அருகாமையில் குளித்துக்கொண்டிருக்கும் போதோ அவர்களை கண்ணும், கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக குளிப்பாட்டி அழைத்து செல்லுங்கள் அதுபோக உங்கள் கண் பார்வைக்கு எட்டும் தூரத்திற்க்கே குளிக்க அனுமதித்து அவர்களை மிகவும் எச்சரிக்கையோடு கண்கானித்திடுங்கள். அதுபோக வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லாது பிள்ளைகளை தனியாக குளிக்க, குளங்களுக்கு ஒருபோதும் அனுப்பாதீர்கள்.
குறிப்பாக குளத்திற்கு சிறுவர்கள் செல்வதை பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் கண்காணித்து தடுப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் குழந்தைகளை நேரம் ஒதுக்கி கண்காணிக்க வேண்டியது பொருப்பாளர்களின் கடமையும் பொறுப்பாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.