புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது;-
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் இன்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஏம்பல் கிராம வாரச்சந்தை, சுகாதார வளாகம், கிராம ஊராட்சி சேவை மையம் ஆகியவை பார்வையிடப்பட்டது.
இதில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து சுயதொழில் புரிவோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கச்சேரி ஊரணி, மணியார் ஊரணி, மடத்தூரணி, வயலாங்குடி கண்மாய், அண்டக்குளம் போன்றவற்றை பார்வையிட்டு குளங்களில் உள்ள குப்பைகளை அகற்றவும், தேவையான இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.ஆர்.கே நகர் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, ஊராட்;சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், ஊர்ப்புற நூலகம், அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்;வின் போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வு காணவும், வளர்ச்சித் திட்டப் பணிகளில் தேவையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.