’புத்தகங்களை பார்த்து எழுதலாம்’ - அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியீடு






உயர்கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பருவத்தேர்வுகள் பிப்ரவரி 1 ந் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுகளை எழுத உள்ளனர். ஆன்லைன் தேர்வுகளை எழுதக்கூடிய மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதவும் உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

மாணவர்கள் தங்களின் பதிவு எண்கள் மற்றும் இமெயில் ஐடி, செல்போன் எண் போன்ற விபரங்களை பதிவுசெய்ய வேண்டும்.

மேலும், கல்லூரிகளின் நிர்வாகத்தினர் அதனை உறுதிச் செய்ய வேண்டும். அதன்பிறகு கல்லூரியில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தினை தொடர்புகொண்டு மாணவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் மாணவரின் தேர்வு ரத்துச் செய்யப்படும். விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.

மாணவர்கள் எழுத்துத் தேர்வினை ஒரே இடத்தில் அமர்ந்து எழுத வேண்டும். தேர்வில் சரியான விபரங்களை மாணவர்கள் தெரிவிக்காவிட்டால் அதுகுறித்து உடனடியாக விளக்கம் கேட்கப்படும்.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அனைத்து விபரங்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் தகவல்களை தவறாக பதிவு செய்தாலோ, சிறப்புக் குறியீடு ஏதாவது செய்திருந்தாலோ அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுகளில் பங்கேற்பார்கள். தேர்வு துவங்கும் நேரத்தில் மாணவர்களின் வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல், கூகுள் மீட் போன்றவற்றின் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்படும். இதனையடுத்து மாணவர்கள் A4 தாள்களில் விடைகளை எழுத வேண்டும்.

காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவற்றை தேர்வுக்குரிய பாடங்களுக்கான பேராசியர்கள் கண்காணித்து விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யச்சொல்லி பெறுவர்.

அதேபோன்று மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

மேலும் மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

மாணவர்கள் தங்களின் விபரங்களையும், வருகைப் பதிவினையும் https://student_attdetails.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேர்வுகளை செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களில் எழுதலாம். விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் மேலே குறிப்பிட வேண்டும். தேர்வு நடைபெறும் நாள், பக்க எண், கையெழுத்தை ஒவ்வொரு தாளின் கீழே குறிப்பிட வேண்டும். வினாத்தாள் கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்.

அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை மூடப்பட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் அரியர் எழுத விரும்பினால், அவர்களுக்கு வேறொரு கல்லூரி பொறுப்புக் கல்லூரியாக ஒதுக்கப்படும்.

அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்!’ - அமைச்சர் பொன்முடி

``அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்’’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கலை அறிவியல் கல்லூரித் தேர்வுகள் மற்றும் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து `அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வு 

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலைக் கல்லூரி மாணவர்களும், 52,301 பல்கலைக்கழக மாணவர்களும், 4,57,196 பொறியியல் கல்லூரி மாணவர்களும், 1,97,327 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். மேலும், ஆன்லைன் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுதவிருகின்றனர் என்றும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments