கோவிட் பரிசோதனை யார் யாருக்கெல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அந்தத் தகவலின்படி கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியவர்கள்:
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி இருப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்களை பொறுத்தவரை அறிகுறிகள் உள்ளோர்; 60 வயதுக்கு மேற்பட்டோரில் இணைநோய் உடையோர் அல்லது அறிகுறி உடையோர்; கர்பிணி தாய்மார்கள், நோய் எதிர்ப்பு குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதிக்கப்பட வேண்டும்.
மற்றபடி,
கோவிட் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை.
வீட்டுத்தனிமை அல்லது தனிமைபடுத்தப்படும் மையங்களில் இருந்து குணமானவர்கள், மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோர், முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டபிறகே வீடுதிரும்ப வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.