தண்டவாளம் சீரமைப்பு பணி:கீரனூர்-கிள்ளுக்கோட்டை ரெயில்வே கேட் நாளை மூடல்




திருச்சியில் இருந்து காரைக்குடி வரை மின்சார ரெயில் பாதை அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கீரனூர்- கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் தண்டவாள பகுதி பிரிக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments