ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியை தனி தாலுகாவாக ஆக்கும் அறிவிப்பு வெளியாகுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் பகுதி யாகும். தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் காரங்காடு, முள்ளிமுனை உள்பட எஸ்பி பட்டிணம் வரையில் கடற்கரை பகுதியாகும். இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவறு உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரமுள்ள திருவாடானைக்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு திருவாடானை தாலுகாவில்
இருந்த ஆர்எஸ்.மங்கலம் பகுதியை தனி தாலுகா வாக அறிவித்தது அப்ப குதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. அதே போல் தொண்டியையும் தனி தாலுகாவாக அறிவித்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்
இதுகுறித்து தொண்டி சாதிக் பாட்சா கூறுகை யில்,
'எஸ்பி.பட்டிணத்தி லிருந்து திருவாடானை செல்ல வேண்டும் என்றால் தொண்டி வழியாக சுமார் 30 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் முள்ளிமுனை எம்ஆர். பட்டிணம் உள்ளிட்ட கடைகோடி கிராமங்க ளிலிருந்து அலுவல் பணியின் காரணமாக மக்கள் செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். எனவே தற்போது பேருராட்சியாக உள்ள தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.