புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (ஏப்ரல் 13) அன்று பகுதி நேர ரத்து



 


புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (ஏப்ரல் 13) அன்று பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடி டு சென்னை எழும்பூர்  மார்க்கம்

சென்னை கடற்கரை-விழுப்புரம் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, வரும் ஏப்ரல் 13 அன்று புதுக்கோட்டையிலிருந்து காலை 06:05 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் வண்டி எண்-12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் ரயில் 'செங்கல்பட்டு' வரை மட்டுமே செல்லும். மேலும் இந்த ரயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை எழும்பூர் டு காரைக்குடி  மார்க்கம்

அதே நாளில் ஏப்ரல் 13 அன்று சென்னையிலிருந்து மாலை 03:45 மணிக்கு புதுக்கோட்டை நோக்கி புறப்படும் 12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி 'பல்லவன்' ரயில் வழக்கம்போல் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடி பல்லவன் அதிவேக அதிவிரைவு ரயிலும் , மதுரை வைகை அதிவேக அதிவிரைவு ரயிலும் ரேக் சேரிங் செய்கிறது ...



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments