நோன்பு பெருநாள் தொழுகை 3 வருடங்களுக்கு பின் கோபாலப்பட்டிணத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு









நோன்பு பெருநாள் தொழுகை 3 வருடங்களுக்கு பின்னர் கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானம் & அரண்மனை தோப்பு பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

3 வருடங்களுக்கு பின்னர்

கடந்த காலங்களில் கொரோனா பிடியின் அச்சுறுத்தல் உட்பட இதர காரணங்களினால் பெருநாள் தொழுகை கட்டுப்பாடுகளுடன்  இடம்பெற்றிருந்தன. நேற்று  இஸ்லாமியர்கள் தமது புனித ஈகை திருநாளான நோன்பு பெருநாள் பண்டிகையை 3 வருடங்களின் பின சிறப்பாக கொண்டாடினர். .

இந்தியாவில் 01/05/22  ஞாயிறுக்கிழமை ரமலான் பிறை 29 முடிந்ததும் ஷவ்வால் முதல் பிறை  தேடப்பட்டது பிறை தென்படாததால்  ரமாலன் மாதம்   நோன்பு 30 நிறைவு செய்து  ஷவ்வால் பிறை முதல் நாளான 03/05/2022  செவ்வாய்க்கிழமைநோன்பு பெருநாள் தினமாக கொண்டாடப்பட்டது .

ஈத்கா மைதானம்
 
கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில்  காலை 6.30 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. காட்டுப்பள்ளி இமாம் கலீல் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதன் பிறகு குத்பா உரை, தூஆக்கள் செய்யப்பட்டது.

இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என ஏறாளமானோர் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

அரண்மனை தோப்பு

TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அரண்மனை தோப்பில் காலை 7.00  மணிக்கு நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகையை தொடர்ந்து  சகோதரர் பெங்களூர் ஈசா அவர்கள்  பெருநாள் உரை நிகழ்த்தினார்.

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில்  தொழுகையினை நிறைவேற்றினார்கள்

கோபாலப்பட்டிணம் மக்கள் ஈகை திருநாளான பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்  தமது  வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க ஈகை திருநாளை கொண்டாடி புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்..











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments