காரைக்குடி கோட்டையூர் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (34), மகள் நிகீதா (9). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். இவரது முன்னால் பெருமாநாடு பகுதியை சேர்ந்த சுப்பையா (52), அவரது உறவினர் மலையாண்டி மனைவி செல்வி (43) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது, திடீரென சுப்பையா மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த வழியாக வந்த மணிவேல் என்பவர் ஓட்டி வந்த காரும், எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமாரின் கார் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சங்கீதா, நிகீதா, சுப்பையா, செல்வி மற்றும் மணிவேல், அவரது காரில் வந்த சுகன்யா ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.