புதுக்கோட்டை மாவட்டத்தில்பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு,சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள்விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.




புதுக்கோட்டை மாவட்டத்தில்பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு,சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள்விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென பள்ளி விடுதிகள் 45 மாணவர்களுக்கும், 19 மாணவியர்களுக்கும் மற்றும் கல்லூரி, ஐடிஐ விடுதிகள் 6 மாணவர்களுக்கும், 5 மாணவியர்களுக்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்ஃமாணவியர்களும் கல்லூரி, ஐடிஐ விடுதிகள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர்ஃமாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவர்ஃமாணவியர்களும், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்ஃமாணவியர்களுக்கும், உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ஃமாணவியருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்ஃமாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளான, பெற்றோர்ஃபாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000ஃ-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-;க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ ஃ மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்ஃகாப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2022-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை 31.07.2022-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவஃமாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படும், அவர்களது படிப்பு முடியும் வரை, விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படும். எனவே மாணவஃமாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments