கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதிகளில் குளிர்வித்த மழை




கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதிகளில்  மழை பெய்தது.

தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ,கோபாலப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அனல் காற்று வீசியது. இதனால் மதிய வேளையில் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென  மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன், மழை நீர் ஓடியது.

திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments