அறந்தாங்கியில் தேங்காய் விலையை உயர்த்தக்கோரி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தபால் நிலையம் அருகே தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசு மட்டை நீக்கிய தேங்காய் கிலோ ரூ.50-க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திட ஆணை வழங்கிட வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். அறந்தாங்கியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்திட வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மானியம் மற்றும் திட்டங்களை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். தென்னையில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.