இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொலை




இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொலை


இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரில் பாலஸ்தீன போராளிகளை கைது செய்வதாக கூறி நேற்று அங்கு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இஸ்ரேல் படையினரால் பாலஸ்தீனர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments