பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தொடக்கப் பள்ளிக்கு நவீன தொலைக்காட்சி வழங்கல்




தொடக்கப் பள்ளிக்கு நவீன தொலைக்காட்சி வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வெளிநாடு வாழ்இளைஞா்கள் சாா்பில் அதிநவீன தொலைக்காட்சி வழங்கப்பட்டது.


திருக்களம்பூா் அண்ணா நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சி மன்றத்தலைவா் ராமாயி மணி பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா். விழாவில் அண்ணாநகரைச்சாா்ந்த சிங்கப்பூா் வாழ் இளைஞா்கள் பள்ளிக்கு ஸ்மாா்ட் தொலைக்காட்சியை வழங்கினா். தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியா் கூ.கவிதா வரவேற்றாா். ச.மணிக்குமாா் நன்றி கூறினாா்.

கந்தா்வகோட்டை அருள்மாரி பள்ளிக்குழுமம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, பள்ளி தாளாளா் க.கருப்பையா தலைமை வகித்தாா். சு. தேவசேனா வரவேற்றாா். விழாவில் பள்ளி முதல்வா் ரா. ராஜரத்தினம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்கள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றினாா். இறுதியாக ரா. சிவராஜன் நன்றி கூறினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments