புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்க போட்டி 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு





        புதுக்கோட்டையில் 70-வது தமிழ்நாடு மாநில ஓபன் சதுரங்க போட்டி தொடங்கியது. மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டி வரும் 18-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ராமச்சந்திரன், செயலர் கணேசன், துணைத்தலைவர் அடைக்கலவன் உள்பட பலர் செய்திருந்தனர். நேற்று நடந்த போட்டியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வீரர்களுடன் விளையாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments