மணமேல்குடி ஒன்றியத்தில் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிப்பு




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் திரு சே மணிவண்ணன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர்

 திரு  நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கொடுப்பதற்காக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு மணமேல்குடி வட்டார வள மையம் மேற்பரப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கொடுப்பதற்காக மணமேல்குடி வட்டார வளமையத்தில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை  ஆசிரியர்கள் தயாரித்தனர். 

ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பாடத்துடன் தொடர்புடையதாகவும் அதேபோல் மாணவர்களுக்கு வாழ்க்கை திறன்களை கற்றுக் கொடுப்பதாகவும்  கற்றல் கற்பித்தல் உபகரண பொருட்களை மாணவர்கள் கையாளும் பொழுது நேரடியாக அனுபவ அறிவினை பெறுகின்றனர்.

கற்றல் கற்பித்தல் உபகரண பொருட்கள் தயாரிப்பில் தொடக்கநிலை ஆசிரியர்கள் லதா, அருளானந்து ,விஜி ஸ்ரீ , ஜெயக்குமார், அறிவழகன், பெனோ பாக்கியராஜ், ஆஷா , சுபா  நந்தினி மற்றும் ஜோதி ஆகியோர் பங்கேற்றனர். பல

இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு முத்து ராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கன்னி ஆகியோர் பங்கேற்றனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments