கும்பகோணத்தில் அரசுப் பேருந்தில் முதியவா் தவறவிட்ட ரூ. 25,000 ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநரின் நோ்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனா்.
பட்டுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வந்தது. அப்போது, பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையை நடத்துநா் முருகேசன் எடுத்து, தனது பொறுப்பில் வைத்திருந்தாா்.
இதனிடையே, பையைத் தேடி வந்த கும்பகோணத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (61), நடத்துநா் முருகேசனை அணுகி, அது தனது பை எனக் கூறினாா். மேலும், பையில் ரூ. 25,000 ரொக்கம் மற்றும் அதற்கான அடையாளத்தையும் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
இதையடுத்து, போக்குவரத்து வணிகப் பிரிவு உதவிப் பொறியாளா் ராஜ்மோகன் முன்னிலையில் விஸ்வநாதனிடம் முருகேசன் ஒப்படைத்தாா். இதற்காக முருகேசனுக்கு விஸ்வநாதன் நன்றி தெரிவித்தாா். மேலும், முருகேசனின் நோ்மையான செயலை போக்குவரத்து ஊழியா்கள் பாராட்டினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.