92-வது சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)-பத்தாஹ் கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து இரத்ததான முகாம் 16/09/2022 வெள்ளிக்கிழமை பத்தாஹ்வில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் நடைபெற்றது.
முகாமை கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் இணைந்து துவங்கி வைத்தனர். இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும், தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் 92-வது தேசிய தினத்தை முன்னிட்டு 92 குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர்.மேலும் நேரமின்மை காரணமாக, இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் பரிசு பையுடன் வழங்கப்பட்டது. முகாம் வெற்றிகரமாக நடைபெற களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், தண்ணீர், தேநீர், குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோதரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக. இறுதியாக பத்தாஹ் கிளை தலைவர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் அனைவருக்கும் நன்றியுரையாற்ற முகாம் இனிதே நிறைவடைந்தது.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
மத்திய மண்டலம்,
ரியாத் - சவூதி அரேபியா.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.