புதுக்கோட்டையில் விவசாய கண்காட்சி தொடக்கம் விதை முதல் வேளாண் பொருட்கள் விற்பனை




புதுக்கோட்டையில் மாபெரும் விவசாய கண்காட்சி லேனா திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். கண்காட்சியில் பாரம்பரிய நெல் விதைகள், நாற்று உற்பத்தி, நவீன வேளாண் கருவிகள், டிராக்டர்கள், நிலக்கடலை விதை விதைப்பு கருவிகள், பண்ணை உபகரணங்கள், இயற்கை இடு பொருட்கள், கால்நடை வளர்ப்பு முறை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், சொட்டுநீர் பாசனம், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் முறை உள்பட விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 45-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது. இதில் விதை உள்பட வேளாண் பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. 

நகராட்சியின் தயாரிப்பான அடி உரமும் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிகம் பார்வையிட்டு வருகின்றனர். கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சி நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. கண்காட்சி தொடக்க விழாவில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் மூர்த்தி, விவசாயிகள் சங்க பொது செயலாளர் தனபதி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கீரின் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர் விநாயகமூர்த்தி செய்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments