செகந்திராபாத்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக காலை மற்றும் மாலை இரு நேரங்களில் திருவாருர்- காரைக்குடி பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது.இதே வழித்தடத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை வந்து செல்கிறது. இந்த ரயில்களில் அடிக்கடி கால்நடைகள் அடிபட்டு உயிரிழக்கின்றன.
இந்தநிலையில் இப்பகுதியில் வாரம் ஒருமுறை வந்து செல்லும் செகந்திராபாத்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்றது.
4ஆடுகள் சாவு அப்போது தண்டவாளத்தில் படுத்து கிடந்த 4 ஆடுகள் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.உயிரிழந்த ஆடுகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாடாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆடுகளை எடுத்து சென்றனர்.
ரயில் தண்டவாளத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
ரயில் தண்டவாளத்தில் யாரும் அஜாக்கிரதையாக கடக்கக் கூடாது. தண்டவாள பாதையில் ஆடு, மாடுகள் போன்றவற்றை மேய்க்க கூடாது. விதிமுறைகளை மீறி விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
இருப்புபாதை அருகே பொதுமக்கள் செல்வதையோ, தண்டவாளங்களை கடப்பதையோ, கால்நடைகளை இருப்புபாதை அருகே மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.