தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து அரவைக்காக புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பலத்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மழை வெறித்த நிலையில் அங்கிருந்து சரக்கு ரெயிலில் ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் வேகன்களில் இருந்து நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். லாரிகள் மூலம் அவை அரவைக்காக அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரவைக்கு பின் அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.