மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் புதுக்கோட்டை வந்தன




தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து அரவைக்காக புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பலத்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மழை வெறித்த நிலையில் அங்கிருந்து சரக்கு ரெயிலில் ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் வேகன்களில் இருந்து நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். லாரிகள் மூலம் அவை அரவைக்காக அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரவைக்கு பின் அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தில் பயன்படுத்தப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments