காரைக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அறந்தாங்கி அருகே தண்டவாளத்தில் கடந்த சென்ற ஆடுகளை காப்பாற்ற ரயிலை நிறுத்திய லோகோ பைலட்: பயணிகள் நெட்டிசன்கள் பாராட்டு




காரைக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அறந்தாங்கி அருகே தண்டவாளத்தில் கடந்த சென்ற ஆடுகளை காப்பாற்ற  ரயிலை நிறுத்திய லோகோ பைலட் பயணிகள் நெட்டிசன்கள்  பாராட்டினார் 

இந்தியா உட்பட பல நாடுகளில், வாகனங்களிலும், ரயில்களிலும் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அபூர்வமாக, பயணத்தில் குறுக்கிடும் விலங்குகளின் உயிரைக் காப்பாற்ற சிலர் முயற்சி எடுப்பதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் அறந்தாங்கி அருகே நடந்திருக்கிறது.

திருவாரூர் காரைக்குடி திருவாரூர் இடையே தற்போது வாரத்தில் 5 நாட்கள் (சனி ஞாயிறு தவிர) முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது..

இந்நிலையில் கடந்த நவம்பர் 16 அன்று காரைக்குடியில் இருந்து மாலை 4.00 மணிக்கு ரயில் புறப்பட்டு திருவாரூர் நோக்கி சென்ற கொண்டு இருந்தது 
ரயில்  பெரிய கோட்டை ரயில் நிலையம் தாண்டிய பிறகு  அப்போது தண்டவாளத்தில் ஆடுகள் கடந்த சென்று கொண்டிருந்ததை பார்த்த என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை மெதுவாக இயக்கி ஹாரனை ஒலிக்க செய்தார். இதனை கேட்டதும் அந்த  தண்டவாளத்தில் இருந்து ஆடுகள்  அடுத்த பகுதிக்கு வேகமாக சென்றது. இதனால் சில நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது

இதற்கிடையே   ரயிலில் இருந்த‌ யூடியுபர்  ஒருவர், பதிவிட்டார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
ஆடுகளை உயிரைக் காப்பற்ற துரிதமாகச் செயல்பட்ட ஓட்டுநரை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். லோகோ பைலட்டின் சிறப்பான செயல் காரணமாகவே விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்,

தண்டவாளத்தில் கால்நடைகளை சுற்ற விட்டால். உரிமையாளர்கள் மீது ரெயில்வே சட்ட 1989-ன்படி 154-வது பிரிவின் தண்டிக்கப்படுவார்கள்' என்பதால் உரிமையாளர்கள் ரயில் தண்டவாளத்தில் மேயச்சலுக்கு வீடாதீரகள்

Video Credit : Michael Raj 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments