மணமேல்குடி ஒன்றியத்தில் நேற்று இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கருத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். இந்திராணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் நான்கு மையங்களில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கருத்தாளர்களுக்கு முன் ஏற்பாடுகள் செய்வதற்கும் கற்பித்தலில் மாணவர்களுக்கு முன் தீர்வு நடத்துவது பற்றியும் பின்தேர்வு நடத்துவதை குறித்து விளக்கம் வழங்கப்பட்டது.
கற்றல் கற்பித்தலில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கற்கும் திறனை அறிந்து குறைதீர் கற்பித்தல் பயிற்சி தன்னார்வலர்களுக்கு வழங்குவது தொடர்பாக அனைத்து கருத்துகளையும் தெளிவாக பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் ஆசிரியர், பயிற்றுநர் வேல்சாமி மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
இப்பயிற்சியில் ஆசிரியர், பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.