ஆவுடையார்கோவில் ஒன்றியம், தாழனூர் ஊராட்சியில், கூடலூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் நேற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் தலைமையில், தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்து காமாட்சி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், 1,300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன், கூடலூர் முத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.