ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்




ஆவுடையார்கோவில் தாலுகாவில் பணிபுரிந்து வரும் வருவாய் ஆய்வாளர் ஒருவர் தொடர்ந்து பல கிராம நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து வருவதோடு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரியாமல் கிராமக்கணக்குகளை எடுத்து வரச்சொல்லி கிராம உதவியாளர்களை மிரட்டி நில அளவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக சங்க பிரதிநிதிகளுடன் ஆவுடையார்கோவில் தாசில்தாரிடம் முறையிட்டதற்கு, சங்கம் தீர்மானம் எப்படி இயற்றலாம் என அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதோடு வருவாய் ஆய்வாளர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் ஆய்வாளரை உடனடியாக பணிமாற்றம் செய்தும், வருவாய் ஆய்வாளருக்கு ஆதரவாக தமது கடமையை செய்ய தவறியதோடு ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் தாசில்தாரை இடமாற்றம் செய்ய கோரி அனைத்து பணிகளையும் புறக்கணித்து ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவுடையார்கோவில் வட்ட கிளையின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments