ஆவுடையார்கோவில் அருகே மணல் அள்ளி வந்த டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரி
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் வெள்ளாற்று பகுதியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேரடியாக மணல்குவாரிக்கு சென்று மணல் அள்ளுவதற்கு பதிலாக, பொதுப்பணித்துறை சார்பில் அள்ளி வைக்கும் மணலை எடுக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அள்ளி வைக்கும் மணலில் தரம் இல்லை. இதனை மக்களிடம் விற்க முடியாது. அதற்கு பதிலாக தாங்களே நேரடியாக மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.