அதிராம்பட்டினத்தில் குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே கேட் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு




அதிராம்பட்டினத்தில் குண்டும், குழியுமாக ரெயில்வே கேட் சாலை மாறி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே கேட் சாலை

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதனை கடந்து கட்டுமாவடி, தொண்டி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லலாம். மகிழங்கோட்டை, ராஜாமடம், ஆகிய கிராம பகுதியில் இருந்து செல்லவும், அதிராம்பட்டினத்திற்கு வரவும் இந்த ரெயில்வே கேட் சாலையை கடந்து தான் அனைத்து வாகனங்களும் வர வேண்டும்.

வாகன ஓட்டிகள் காயம்

கடந்த சில மாதங்களாக ெரயில்வே கேட் தண்டவாளங்களை கடக்கும் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே கேட் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள அதிராம்பட்டினம் ரெயில்வே கேட் சாலையை சீரமைத்து தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments