அகஸ்தியம்பள்ளிக்கு நேற்று முன்தினம் ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி திருத்துறைப்பூண்டியில் ஒரு மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்சேவை தொடக்கம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளிக்கு நேற்று முன்தினம் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாலை 6 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் திருத்துறைப்பூண்டியில் 6 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் இரவு 7 மணிக்கு தான் ரெயில் சேவையை தொடங்குவதற்கான கொடி கொடி அசைக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் மூடி இருந்ததால் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, வேளாங்கண்ணி, நாகை, நாகூர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
ரெயில்வே கேட் திறந்த உடன் இந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை போலீசார் ஒரு மணிநேரம் போராடி சீரமைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.