மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக, அரசநகரிபட்டினம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
மேலும் அந்த பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அரசநகரிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முற்றிலும் இருளில் மூழ்கின.
இதுமட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றின் வேகம் தாங்காமல் மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.