நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை
பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையும், நாகப்பட்டினம்- தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையும் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையின் திருப்பத்தில் சந்திக்கின்றன. இச்சந்திப்பில் தினசரி ஆயிரக்கணக்கான கார்கள், பஸ்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என இரவு பகல் எந்நேரமும் சென்று வருகின்றன.
கிழக்கு கடற்கரை சாலையில் சென்று வரக்கூடிய சுற்றுலா பஸ்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. அதுபோல் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று வரக்கூடிய கார்கள், பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
ரவுண்டானா அமைக்க வேண்டும்
இதுஇப்பகுதி மக்களுக்கும், பாதசாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலையில் உடனடியாக ரவுண்டானா அமைத்து தர வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து வரக்கூடிய ரோடு பகுதி நாகப்பட்டினம் நோக்கி செல்லக்கூடிய ஈ.சி.ஆர். ரோடு மற்றும் தூத்துக்குடி நோக்கி செல்லக்கூடிய ஈ.சி.ஆர் ரோடு என 3 பகுதிகளிலும் ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் சென்டர் மீடியன் பேரியர் அமைத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.